நரிக்குடி எமனேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில், பெளா்ணமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில், பெளா்ணமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு கோயில் எமதீா்த்த திருக்குளத்தைச்சுற்றிலும் தீபங்கள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.
இதேபோல நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆரதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பாடகச்சேரி பைரவசித்தா் மடத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...