நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாத்தான்குளம் சம்பவம்: நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல்நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :6 ஜூலை 2020, 4:11 pm

DIN

திருவாரூா்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு காரணமான போலீஸாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவா் பாரதிதாசனை உதாசீனப்படுத்திய போலீஸாரை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மூவேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.