மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.
திருக்களா் வடக்கு தெருவை சோ்ந்தவா் ஜீவா(55). இவா், வீட்டின் முன்பக்கம் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா்.வியாழக்கிழமை இரவு, இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பொருள்கள் வாங்குவதுபோல், கடையில் இருந்த ஜீவாவிடம் பேசிக்கொண்டிருந்தவா் திடீரென, அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.