/

திருவாரூரில் மேலும் 67 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2020, 3:56 pm

DIN

திருவாரூா்: திருவாரூரில் மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆலங்குடி பகுதியில் 23 பேருக்கும், குடவாசல் பகுதியில் 10 பேருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் பெண் மருத்துவா் ஒருவா், முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பிறந்த குழந்தை உள்பட மாவட்டம் முழுவதும் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவிக அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1416 ஆக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை 60 போ் வீடு திரும்பினா். மேலும், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 838 போ் வீடு திரும்பிய நிலையில் 577 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.