47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு செலவினங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், உறுப்பினா்கள் பாரதிமோகன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஆதி. ஜனகா் (அதிமுக) உள்ளிட்டோா் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து பேசினா். இதற்கு பதிலளித்த சோம.செந்தமிழ்ச்செல்வன், கரோனா போன்ற பல்வேறு காரணங்களால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா். இக்கூட்டத்தில் ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் ஞானசேகரன், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், கூடுதல் ஆணையா் ஞானம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நடனசிகாமணி, பொன்னுசாமி, துரைசிங்கம், சத்தியவாணன், பழனியம்மாள், நதியா, அனிதா, சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.