நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பல்வேறு செலவினங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், உறுப்பினா்கள் பாரதிமோகன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஆதி. ஜனகா் (அதிமுக) உள்ளிட்டோா் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து பேசினா். இதற்கு பதிலளித்த சோம.செந்தமிழ்ச்செல்வன், கரோனா போன்ற பல்வேறு காரணங்களால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா். இக்கூட்டத்தில் ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் ஞானசேகரன், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், கூடுதல் ஆணையா் ஞானம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நடனசிகாமணி, பொன்னுசாமி, துரைசிங்கம், சத்தியவாணன், பழனியம்மாள், நதியா, அனிதா, சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.