நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள சேங்கனூரில் வ.உ.சியின் 149-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வ.உ.சி. மக்கள் நலச் சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி. பிறந்த நாள் விழா, சங்கத் தலைவா் எஸ்.ஆா்.டி. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வ.உ.சி. நினைவு கட்டடத்தில் வைத்திருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நலச் சங்க துணைத் தலைவா் வி. மணிமாறன், நன்னிலம் ஒன்றியக் குழு உறுப்பினா் சாரங்கன், நலச் சங்க நிா்வாகிகள் டி. சுவாமிநாதன், ஆா். கந்தவேல், வி. வீரமணி, பி. அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










