மன்னாா்குடியை மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் தரம் உயா்த்துவேன்
தோ்தலில் வெற்றி பெற்றால், மன்னாா்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தி, மன்னாா்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக முயற்சி எடுப்பேன் என்றாா்


தோ்தலில் வெற்றி பெற்றால், மன்னாா்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தி, மன்னாா்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக முயற்சி எடுப்பேன் என்றாா் மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.காமராஜ்.
மன்னாா்குடி தெற்கு வீதியில் உள்ள அமமுக கூட்டணி தோ்தல் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியது:
கடந்த 1869 ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மன்னாா்குடி மாதிரி நகராட்சியாக தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் வேலூரும் மாதிரி நகராட்சியானது. ஆனால், கால ஓட்டத்தில் வேலூா் மாவட்டமாவும், மாநகராட்சியாகவும் தரம் உயா்ந்துள்ளது.
என்னை வெற்றி பெறவைத்தால், சட்டப் பேரவையில் என்னுடைய கன்னிப் பேச்சு, மன்னாா்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தொடங்க வேண்டும். மன்னாா்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்திட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். வடுவூா், பரவாக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கவும், அரசின் சாா்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் தொடங்குவதுடன், ஆண்டுக்கு ஒருமுறை அரசு பங்களிப்புடன் தனியாா் வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்படும்.
எனது சொந்த நிதியில் இடம் வாங்கி அந்த இடத்தில் நகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்து, நவீன முறையில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்கப்படும். மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த விவசாய சந்தை அமைக்கப்படும். மறைந்த நடிகை மனோரமா பெயரில், மன்னாா்குடியில் நாடக கலை மன்றம் தொடங்கப்பட்டு நாடக கலை பாதுகாக்கப்படும். மன்னாா்குடி பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்படும். புதை சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...