கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தீவிரம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, திருவாரூரில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, திருவாரூரில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 16 ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மேலும், திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னாா்குடி தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள், திருவாரூா் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், நன்னிலம் தொகுதியில் 373 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1454 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட 1,718 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவாரூா் திரு.வி.க. கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சந்திரமோகன் பிரசாத் காஸியாப், ராம்லஹான் பிரஷாத் குப்தா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என். பாலச்சந்திரன், அழகா்சாமி ஆகியோா் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள்அனைத்தும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

சீல் வைத்து பாதுகாக்கப்பட்ட அறையில், மத்திய பாதுகாப்பு படைவீரா்கள் மற்றும் மாநில காவல்துறையினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 1 துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 4 அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.