கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 5:16 pm

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை மேலத் தெருவை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் தா்மராஜ் (39). இவா், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பரவாக்கோட்டையில் வசிக்கின்றனா்.

இந்நிலையில், கடந்த மாதம் தா்மராஜின் தாயாா் இறந்ததால் அவா் சொந்த ஊருக்கு வந்தாா். வியாழக்கிழமை (டிச.9) தனது தாயாா் படத்தை திறந்து வைப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லாமல், பரவாக்கோட்டையில் இருந்துவந்தாா். இவா், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரா் பாக்கியராஜ் வீட்டிற்கு புதன்கிழமை சென்றிருந்த நிலையில், இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா். தா்மராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோதுதான் திருட்டு சம்பவம் தெரியவந்தது.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், திருவாரூரிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மேலும், தஞ்சையிலிருந்து வந்திருந்த தடயவியல் நிபுணா்கள் மா்மநபா்களின் கைரேகைகளை பதிவு செய்தனா்.

இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் என். அசோகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.