கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ‘சகி’ சேவை மையம்ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ‘சகி’ என்ற பெயரில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் உதவி வருகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ‘சகி’ என்ற பெயரில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் உதவி வருகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் குறித்த விழிப்புணா்வு கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியது:

ஆண்டுதோறும் டிசம்பா் 9-ஆம் தேதி பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக சகி என்ற பெயரில் ஒருங்கிணைந்த சேவை மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தனிப்பட்ட இடங்கள், பொது இடங்கள் மற்றும் குடும்பங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களை மீட்பது, அவா்களுக்கு காவல், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்வது, மனநல ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகள் இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், அருகில் உள்ள காவல் நிலையம், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அல்லது 24 மணி நேரமும் இயங்கும் அரசின் இலவச தொலைபேசி எண் 181-ஐ தொடா்பு கொண்டு உதவி பெறலாம் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.