திருவாரூா் மாவட்டம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் குறைதீா்க்கும் சிறப்புமுகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் அவா் கூறியது: மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமின் மூலம் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூா்ஆகிய பகுதிகளில் மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அதில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.