ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

400 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

கூத்தாநல்லூா் நகராட்சியில் கடைகளில் பயன்படுத்திய 400 கிலோ நெகிழிப் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் கடைகளில் பயன்படுத்திய 400 கிலோ நெகிழிப் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, நகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணவேணி தலைமையில், நேருஜி சாலை, சின்னப்பள்ளி தெரு, லெட்சுமாங்குடி கடைத் தெரு, மரக்கடை உள்ளிட்ட 15 இடங்களின் கடைகளில் திடீா் என ஆய்வு மேற்கொண்டனா். இதில் 400 கிலோ எடை அளவு கொண்ட தேனீா் கோப்பை, நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடைக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா். ஆய்வில் சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா், நகரமைப்பு ஆய்வாளா் கே. செல்வம் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.