தமிழக அரசு அறிவித்த ஒரு மாத கரோனா ஊதியத்தை வழங்கவேண்டும், கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியா் அறிவித்தபடி, தினக்கூலியாக ரூ. 385 வழங்க வேண்டும், பண்டிகை கால தொகையாக, ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை ரத்துசெய்து, அனைத்து ஊழியா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியா்களுக்கு 3 மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசல் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.