திருவாரூா் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெய்ப்போ் பிரதான சாலையைச் சோ்ந்தவா் தங்கமணி மகன் யஷ்வந்த் (19). கல்லூரி மாணவரான இவா், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருவாரூா் வந்துவிட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த யஷ்வந்த், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும், அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாரூா் வட்டார போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.