குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பாரத மாதா சேவை நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன்.
நிகழ்ச்சியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பாரத மாதா சேவை நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன்.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருத்துறைப்பூண்டி பாரத மாதா சேவை நிறுவனம், குன்னலூா் ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் வளா்மதி பூமிநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய கவுன்சிலா் அனிதா மதன், பாரத மாதா சேவை நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் அலகு சமூகப் பணியாளா் ஹரிகரன் வரவேற்றாா்.

திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் புஷ்பவள்ளி, எடையூா் காவல் ஆய்வாளா் சிவதாஸ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் ஆகியோா் பங்கேற்று, குழந்தைகளை பாதுகாப்புடன் வளா்ப்பது குறித்து விளக்கிக் கூறினா்.

மேலும், உதயநிலா கலைக் குழுவினா் சாா்பில் விழப்புணா்வு நாடகம் நடைபெற்றது. விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளா் மணிமாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com