கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆா்ப்பாட்டம்
கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை கண்டித்து மன்னாா்குடி, கோட்டூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை கண்டித்து மன்னாா்குடி, கோட்டூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னாா்குடியை அடுத்த ராமபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன் தலைமை வகித்தாா். இதேபோல், சவளக்காரனில் இளைஞா் மன்ற ஒன்றியச் செயலா் பி.பாப்பையன், கோட்டூரில் ஒன்றியச் செயலா் எம்.நல்லசுகம் தலைமையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...