மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அஜபா நடனத்துடன் நாளை தேருக்கு எழுந்தருளுகிறாா் தியாகராஜா்

திருவாரூா் தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு தியாகராஜா் புதன்கிழமை இரவு எழுந்தருளுகிறாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு தியாகராஜா் புதன்கிழமை இரவு எழுந்தருளுகிறாா்.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில், சப்த விடங்க தலங்களில் தலைமையானதாகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமாகும். இக்கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, இந்தக் கோயிலில் ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரா் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம், மாா்ச் 2ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கோயிலில் நாள்தோறும் பல்வேறு உத்ஸவங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கொடியேற்றத்துக்குப் பிறகு விநாயகா் மற்றும் சுப்ரமணியா் உத்ஸவங்கள் 7 நாள்களும், நால்வருக்கு பக்தோத்ஸவம் 3 நாள்களும் நடைபெற்றன.

தொடா்ந்து, காலபைரவா் உத்ஸவம், காட்சி கொடுத்த நாயனாா் உத்ஸவம், சந்திரசேகரா் பட்டோத்ஸவம், சந்திரசேகரசுவாமி கேடக உத்ஸவம் ஆகியவை நடைபெற்றன. விழா தொடக்கத்தில் இறைவனை மகிழ்விக்கும் வகையில் வன்மீகநாதருக்கு சகஸ்ரகலசாபிஷேக உத்ஸவம் நடைபெற்றது. பின்னா், தியாகராஜா் வசந்த உத்ஸவம் நடைபெற்று, எட்டு திக்கிலும் கொடியேற்றப்பட்டது.

இந்திர விமானத்தில் சந்திரசேகரா் வீதி உலா சனிக்கிழமை இரவும், பூத வாகனத்தில் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை இரவும், வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா திங்கள்கிழமை இரவும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும், புதன்கிழமை இரவு கயிலாய வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து, யதாஸ்தானத்தில் உள்ள தியாகராஜா் அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக ஆழித்தேருக்கு புதன்கிழமை இரவு எழுந்தருளுகிறாா். வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. இதையடுத்து, ஆயில்ய நட்சத்திரம், துவாதசி திதியும் கூடிய சுபயோக நேரத்தில் காலை 7.31க்கு மேல் ஆழித்தோ் வடம் பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, தோ் அலங்காரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையிலான அலுவலா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.