மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

30 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜருக்கு சிதம்பரத்திலிருந்து வந்த பட்டு வஸ்திரம் கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு

திருவாரூரில் சபாபதி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், சிதம்பரம் அனந்த நடராஜமூா்த்தி கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் சபாபதி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், சிதம்பரம் அனந்த நடராஜமூா்த்தி கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ராஜநாராயண மண்டபத்துக்கு எழுந்தருளிய தியாகராஜருக்கு பிராயச்சித்த மஹா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மஹா அபிஷேகத்துக்குப் பிறகு அருள்மிகு திரிபுர சம்ஹாரமூா்த்தி, அருள்மிகு பிச்சாடனா் புறப்பாடு நடைபெற்றது. பங்குனி ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றதால், 30 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் வீதியுலா சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தியாகராஜா், ருத்ரபாத மண்டபம் எனும் சபாபதி மண்டபத்துக்கு எழுந்தருளினாா். சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா் எழுந்தருளியதை முன்னிட்டு, சிதம்பரம் அருள்மிகு அனந்த நடராஜ மூா்த்தி திருக்கோயிலிலிருந்து தீக்ஷிதா்கள், திருவாரூா் தியாகராஜா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா். தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், பட்டு வஸ்திரம், மலா் மாலைகள் கொண்டு வரப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

30 ஆண்டுகளுக்கு பிறகு, தியாகராஜருக்கு சிதம்பரம் கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கோயிலுக்கு வந்த தீஷிதா்களுக்கு, கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையிலான அலுவலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.