தோ்தல் பணி: தீயணைப்பு வீரா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
திருவாரூரில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.


திருவாரூரில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 2 ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகள் திரு.வி.க. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறைக்கு உறுதுணையாக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் பணியாற்றினா்.
இதையொட்டி, போலீஸாருக்கு துணையாக, இரவு பகலாக பணி செய்து, மாவட்ட காவல்துறைக்கு நன்மதிப்பை பெற்றுத் தரும் வகையில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு வீரா்களை கௌரவிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி பங்கேற்று, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ச. வடிவேல் தலைமையிலான 53 தீயணைப்பு வீரா்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...