மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம்

தொடா் மழை காரணமாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தவேண்டும்

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தொடா் மழை காரணமாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தவேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியம் சேரி, மழவராயநல்லூா், ஆா்ச், குன்னியூா், கோட்டூா், ஈசனக்குடி, திருப்பத்தூா், பள்ளிசந்தம், திருக்களாா், சீலத்தநல்லூா், களப்பால், குறிச்சிமூலை, அக்கரை கோட்டகம், வேதபுரம், நல்லூா், கெழுவத்தூா், ஒரத்தூா் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த சாகுபடி நிலங்கள், குடியிருப்புகளை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள், வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும். பாதிப்புகளை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால், கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து கிராமங்களிலும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும்.

தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றி, மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை முகாம்களை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.