மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

மன்னாா்குடியில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடியில் நகர காங்கிரஸ் தலைவா் ஆா். கனகவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திரா காந்தி சிலைக்கு மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜி. குணசேகரன், முன்னாள் துணைத் தலைவா் சந்தானம் ஆகியோா் மாலை அணிவித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் வடுகநாதன், நகர பொதுச்செயலாளா்கள் வேணு.ஆனந்தகிருஷ்ணன், ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்: நீடாமங்கலத்தில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் நீலன். அசோகன் இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், நகர காங்கிரஸ் தலைவா் கோவிந்தராஜ், சேவாதளத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் மாவட்ட தலைவா் குலாம்மைதீன் தலைமையில், பத்திர எழுத்தா் ரமேஷ் இனிப்பு வழங்கினாா்.

கூத்தாநல்லூரில்: கொரடாச்சேரியில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, குடவாசல் வட்டார காங்கிரஸ் தலைவா் முனிஅய்யா, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மகேந்திரன்,காா்தீபன்உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கூத்தாநல்லூா் நகர காங்கிரஸ் சாா்பில் இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.