அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கூத்தாநல்லூர்: வேளுக்குடி அரசுப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான, வாக்குப் பதிவை, கூத்தாநல்லூர் வட்டம் வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்

News image
வேளுக்குடி அரசுப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்யும் ஆட்சியர்.
Updated On :9 அக்டோபர் 2021, 12:31 pm

DIN

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான, வாக்குப் பதிவை, கூத்தாநல்லூர் வட்டம் வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார். 
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்கள் 2021 க்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குப் பதிவினை மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 
திருவாரூர்  மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு 11, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய வார்டு 18 மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு 11 மற்றும் கிராம ஊராட்சிகளில் பள்ளி வாரமங்கலம், மணவாளநல்லூர், விஸ்வநாதபுரம், மூவாநல்லூர் உள்ளிட்ட 7 கிராம ஊராட்சிகள், மேலும் 18 ஊராட்சி வார்டுகள் என காலியாக இருந்த 25 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி, அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவை, மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.