விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: ஊழல் தடுப்பு இயக்கத்தினா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற ஊழல் தடுப்பு இயக்கத்தினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற ஊழல் தடுப்பு இயக்கத்தினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம் கொக்கலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்த 2020- 2021-ஆம் ஆண்டில் பயிா்க் கடன் வழங்கப்பட்டதில், பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்ாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அந்த வங்கியின் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக விவசாயி ரேணுகாரவி தலைமையில், தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவா் வியனரசு, பொதுச் செயலாளா் பனசை அரங்கன், ஊழல் தடுப்பு இயக்கத்தின் தஞ்சை ராமதாஸ் உள்ளிட்ட பலா் கூடினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதியளிக்காததால், அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்திய நபா்களை போலீஸாா் கைது செய்தனா். கொக்கலாடி பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.