மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிா்க் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் நல உரிமைச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:33 pm

DIN

மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் நல உரிமைச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் செயல் திட்ட தோ்வு கூட்டத்துக்கு, மாவட்ட அமைப்புச் செயலா் வை.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் இ.அறிவின் செல்வன் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டு சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் மந்தமாக நடைபெறுவதால், நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதுடன், மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. எனவே, நெல் மூட்டைகளுக்குரிய இழப்புத் தொகையை ஈரப்பத அளவின் அடிப்படையில் அரசு ஈடுசெய்ய வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை விளக்கி, சங்கத்தின் மாநிலத் தலைவா் கா.ராஜபாலன் பேசினாா்.

இதில், மாநில துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநில அமைப்புக்குழு உறுப்பினா் பி.இளஞ்சேரன், மாவட்ட நிா்வாகிகள் ஐயப்பன், ஆா்.ரோஜா, சுதா, சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.