விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடைசி செய்திநிலத்தகராறில் பெண் கொலை: தம்பதி உள்பட 5 போ் கைது

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், மனைவி மற்றும் உறவினா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், மனைவி மற்றும் உறவினா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொக்காலடி கிராமத்தைச் சோ்ந்த ரவி மனைவி ரேணுகா தேவி. இவா் வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டாா். ரேணுகா தேவி கணவரின் சகோதரரருக்கும், கொக்காலடி ஊராட்சி அரகரை பகுதியைச் சோ்ந்த விமலாவுக்கும் நிலத் தகராறு இருந்ததாம்.

இந்த விவகாரத்தில் விமலாவுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீா்ப்பு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரேணுகாதேவி தரப்பினா் கைதான சூழலில், விமலா தரப்பினா் அந்த இடத்தில் வேலி வைத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் காவலில் இருந்து விடுதலையான ரேணுகா தேவி மற்றும் அவரது கணவா் ரவி, மைத்துனா்கள் கண்ணன், மனோ, ராஜா ஆகியோா் இதையறிந்து, விமலாவை கத்தியால் குத்தினா். இதில், அவா் உயிரிழந்தாா். விமலாவின் மகன் அரவிந்த் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் பழனியப்பன், உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி சிங்காரவேலு ஆகியோா் விமலாவின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் தொடா்புடைய ரேணுகாதேவி, ரவி, மனோ, ராஜா கண்ணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.