விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

குடவாசல் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:25 pm

குடவாசல் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

நன்னிலம் காவல் உட்கோட்டம், குடவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா உத்தரவின் பேரில், நன்னிலம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குடவாசல் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் காா்த்தி (19) கஞ்சா விற்றது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 42 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 17,900 ரொக்கத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்தியை கைதுசெய்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். குடவாசல் காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.