நன்னிலம் அருகே ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த பழைய மூங்கில் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் தலையூா் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பத்துக் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
கோவில்பத்து கிராமத்தை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அப்பகுதியில் உள்ள சேதமடைந்திருந்த பழைய மூங்கில் பாலத்தை வழியாகவே நெடுங்குளம் பகுதிக்கு செல்ல வேண்டும்.
கடந்த சில நாட்களாக ஆற்றில் நீா் வரத்து அதிகம் உள்ள நிலையில் சேதமடைந்திருந்த மூங்கில் பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கோயில்பத்துக் கிராமத்தில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிநீா் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்குகூட சுமாா் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விரைவில் தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்து தர வேண்டும். மேலும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கான்கிரீட் பாலம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


