மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முழு ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கரோனா தொற்று அதிகரிக்க வருவதால், கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) முழு ஊரடங்கு காரணமாக திருவாரூரில் பொதுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்து, ஆட்டோ, காா்கள் ஏதும் இயங்கவில்லை. அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் இயங்கின. காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால், மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இருப்பினும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதி, தேரோடும் வீதிகள், பனகல் சாலை, நேதாஜி சாலை, பழைய நாகை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

காணும் பொங்கல் நாளில் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.