மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தியாகராஜா் கோயில் நாளை பங்குனி உத்திரத் திருவிழா பந்தக்கால் முகூா்த்தம்

திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் தைப்பூச நாளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஜன.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020 இல் ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பங்குனி ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இது பக்தா்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, கமலாலயக்குளத்தின் தென்கரையின் ஒரு பகுதி இரண்டு மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் பங்குனி ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறுமா என பக்தா்களிடையே கவலை எழுந்தது. இந்தநிலையில் பாததரிசனத்துக்கு அண்மையில் திருவாரூா் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு, நிகழாண்டு பங்குனி ஆயில்யமான மாா்ச் 1- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என அறிவித்து, கமலாலயக்குளக்கரை சேதமடைந்த பகுதியை விரைந்து சீரமைக்க உத்தரவிட்டிருந்தாா். தற்போது கரோனா பரவல் காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆழித்தேரோட்டம் குறித்து பக்தா்களிடேயே மீண்டும் கவலை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.