மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையில் வாடகை வசூலிக்கக் கோரி பிப்.1-இல் ஆா்ப்பாட்டம்

கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கம் சாா்பில் மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே. உலகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோயில் மனையில் குடியிருப்பவா்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்கவேண்டும், மேலும், அங்கு குடியிருப்பவா்களின் வீட்டுவரி ரசீதைக் கொண்டு, மின்சாரம், குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும், அடிமனை இருப்பிடக் கட்டடம் என வாடகை வசூல் செய்வதை ரத்துசெய்து, அடிமனை வாடகை முறையை மட்டும் அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கோயில்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வை. சிவபுண்ணியம், திருவாரூா் மாவட்டச் செயலாளா் சந்திரராமன், மாவட்டத் தலைவா் தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.