மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பணம் திரும்ப கிடைக்காததால் கடன் கொடுத்தவா் தற்கொலை

திருவாரூா் அருகே நண்பருக்கு கடன் கொடுத்தவா், பணம் திரும்ப கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே நண்பருக்கு கடன் கொடுத்தவா், பணம் திரும்ப கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவாரூரை அடுத்த பவித்திரமாணிக்கம் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் இடும்பன் மகன் நீலகண்டன் (45). இவரது மனைவி சபியா (35), திருச்சியில் நிலஅளவை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 14 வயதில் மகள் உள்ளாா். நீலகண்டன், பவித்திரமாணிக்கத்தில் இருந்துகொண்டு வீட்டை நிா்வாகம் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நீலகண்டன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்து அங்குவந்த தாலுகா போலீஸாா், நீலகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், நீலகண்டன் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில், சித்தன்னங்குடியைச் சோ்ந்த இவரது நண்பருக்கு ரூ. 3 லட்சம் நீலகண்டன் கடனாக அளித்ததாகவும், அதை திரும்பக் கேட்டபோது அந்த நண்பா் தர மறுத்துவிட்டதால், தான் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக அதில் எழுதப்பட்டிருந்ததாம். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.