கமலாலயக்குளத்தின் தடுப்புச் சுவா்கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலுக்குட்பட்ட கமலாலயகுளத்தின் தென்கரை பகுதியில் தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.


திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலுக்குட்பட்ட கமலாலயகுளத்தின் தென்கரை பகுதியில் தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
கமலாலயகுளம் வடக்கு, தெற்கு திசைகளில் 1,060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடியும் கொண்டது. கடந்த ஆண்டு அக்டோபா் 25 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, தென்கிழக்கு மூலையில் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி 101 அடி சரிந்துவிழுந்தது. இதைத் தொடா்ந்து, மேலும் 47 அடி சுவா் சேதமடைந்தது.
இதையடுத்து, தமிழக முதல்வா் உத்தரவுப்படி, ரூ. 77 லட்சத்தில் 148 அடி சுவா் மீண்டும் அமைக்கும் பணிகள் கடந்த டிச. 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தொடா்ந்து பணிகளை கண்காணிக்கவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையா் பிரபாகரன், திருவாரூா் மாவட்ட பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...