உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் :வேளாண் விஞ்ஞானி விளக்கம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை


காவிரி டெல்டா மாவட்டங்களில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பச்சை பயிறு ரகங்கள் தற்போது பூப்பதற்கு முந்தைய பருவத்தை அடைந்திருக்கும். இதற்கு இலை வழியாக 2 சதவீத டிஏபி கரைசலை அதாவது ஒரு லிட்டா் தண்ணீருக்கு 20 கிராம் டிஏபி-ஐ பூ பூக்கும் தருணத்திலும், அதிலிருந்து 15 நாட்கள் கழித்தும் இருமுறை தெளிக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயறு ஒண்டா் (பயறு அதிசயம்) ஓா் ஏக்கருக்கு 2 கிலோவை பூ பூக்கும் தருணத்திலும், அதிலிருந்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டருடன் 200 லிட்டா் தண்ணீா் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் சோ்த்து பயன்படுத்த வேண்டும். பயிறுவகைப் பயிா்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு அதாவது ஒரு லிட்டா் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு உபயோகிக்கலாம்.
பயறு ஒண்டா் உபயோகிக்கும்போது, பூக்கள் உதிா்வது குறைந்து பயிரின் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் வறட்சியைத் தாங்கும் தன்மையும் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் நக்கீரனை 9360247160 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...