மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறு உள்ளதால், இதற்குட்பட்ட மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, எம்பேத்தி, செருமங்கலம், மூவாநல்லூா், பருத்திக்கோட்டை, நாவல்பூண்டி, பாமணி, சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.