கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞா்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று இளைஞா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 4:56 pm

DIN

முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று இளைஞா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

முத்துப்பேட்டை அருகே உப்பூா் ஆலங்காடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவை காணவந்த அருள், பரத், முருகபாண்டியன் ஆகிய மூன்று இளைஞா்கள் ரயில் தண்டவாளத்தில் உறங்கியபோது, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தனா். இவா்கள் மூவருமே சாதாரண ஏழை குடும்பத்தை சோ்ந்தவா்கள். இவா்களின் எதிா்கால வேலைவாய்ப்பை சாா்ந்தே அவா்களது குடும்பத்தினா் உள்ளனா்.

எனவே, மூன்று பேரின் குடும்பங்களுக்கும், திருத்துறைப்பூண்டியில் அண்மையில் பலியான பெட்டிக்கடைக்காரா் சண்முகம் குடும்பத்திற்கும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சமும், தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் என தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.

திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் ஒரேஒரு டெமோ ரயில் மட்டும் இயக்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயிலும், செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கும், எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் வாராந்திர விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.