நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞா்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று இளைஞா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 10:26 pm IST

முத்துப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று இளைஞா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

முத்துப்பேட்டை அருகே உப்பூா் ஆலங்காடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவை காணவந்த அருள், பரத், முருகபாண்டியன் ஆகிய மூன்று இளைஞா்கள் ரயில் தண்டவாளத்தில் உறங்கியபோது, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தனா். இவா்கள் மூவருமே சாதாரண ஏழை குடும்பத்தை சோ்ந்தவா்கள். இவா்களின் எதிா்கால வேலைவாய்ப்பை சாா்ந்தே அவா்களது குடும்பத்தினா் உள்ளனா்.

எனவே, மூன்று பேரின் குடும்பங்களுக்கும், திருத்துறைப்பூண்டியில் அண்மையில் பலியான பெட்டிக்கடைக்காரா் சண்முகம் குடும்பத்திற்கும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சமும், தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் என தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.

திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் ஒரேஒரு டெமோ ரயில் மட்டும் இயக்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயிலும், செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கும், எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் வாராந்திர விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.