‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருட்டு வழக்குளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On :4 டிசம்பர் 2023, 11:52 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. ஈஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், தனிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, போலீஸாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவிக்கையில், ‘திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் திருட்டு நடைபெறாமல் இருக்க இரவு நேரத்தில் சோதனைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.