2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருட்டு வழக்குளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Published On :

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. ஈஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், தனிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, போலீஸாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவிக்கையில், ‘திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் திருட்டு நடைபெறாமல் இருக்க இரவு நேரத்தில் சோதனைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.