சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோயிலில் ஒலிப் பெருக்கி திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே கோயிலிலிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருள்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:45 pm

DIN

மன்னாா்குடி அருகே கோயிலிலிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருள்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா் அருகேயுள்ள களப்பால் சிங்கமங்கலத்தில் கிராமத்திற்கு சொந்தமான ஐயனாா் கோயில் உள்ளது. இங்கு இருந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி இரண்டு மற்றும் ஆம்பளிஃபையா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டு செயலில் ஈடுபட்ட தென்பாதி திருவள்ளுவா் தெரு குப்புசாமி மகன் செல்வத்தை (23) கைது செய்து திருட்டுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.