மன்னார்குடி: மன்னார்குடியில் குடி போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாஞ்சியூரை சேர்ந்தவர் விவசாயி மோகன் (55). இவரது மனைவி கமலா. இவர்களுக்கு அரவிந்தன்(18), அர்ஜுன்(15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
அரவிந்தன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவதாகவும், குடிப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு அரவிந்தன் வந்தபோது, தந்தைக்கும் தாய்க்கும் இடையே சாதாரணமாக குடும்பச் சண்டை நடந்துள்ளது.
கைதானா மகன் அரவிந்தன்
இதனை கண்ட அரவிந்தன், குடிபோதையில் அருகில் இருந்த கடப்பாரையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மன்னார்குடி ஊரக காவல்துறையினர் அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

