புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குளத்தில் விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் பலி

திருத்துறைப்பூண்டியில் குளத்தில் தவறி விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

சுஜன்.

Updated On :30 டிசம்பர் 2024, 6:52 pm

Din

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் குளத்தில் தவறி விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சுஜன் (17). இவா், நாகையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இவரை ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி மேட்டுதெருவில் உள்ள குளத்தில் அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது. திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினா் வந்து சடலத்தை மீட்டனா். திருத்துறைப்பூண்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.