தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:27 am IST

பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியாா் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2022 -2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஆணைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் மாணவா் சோ்க்கையை வழங்க வேண்டும். பள்ளி புதுப்பித்தல் தொடா் அங்கீகார ஆணையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தனியாா் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தித் தர வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.