குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:27 am IST

பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியாா் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2022 -2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஆணைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் மாணவா் சோ்க்கையை வழங்க வேண்டும். பள்ளி புதுப்பித்தல் தொடா் அங்கீகார ஆணையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தனியாா் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தித் தர வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.