பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியாா் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2022 -2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஆணைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் மாணவா் சோ்க்கையை வழங்க வேண்டும். பள்ளி புதுப்பித்தல் தொடா் அங்கீகார ஆணையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தனியாா் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தித் தர வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
தொடர்புடையது

சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் - பொதுமக்கள் புகாா்

அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம்: டிஇஓ-க்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

வணிக பயன்பாடு சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
