அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

‘கைப்பேசிகளை கவனமாக கையாள வேண்டும்’

‘கைப்பேசிகளை கவனமாக கையாள வேண்டும்’

Updated On :17 பிப்ரவரி 2024, 6:02 am IST

கைப்பேசிகளை கவனத்துடன் கையாள வேண்டும் என்று திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சைபா் குற்றங்கள குறித்த விழிப்புணா்வு பேரணி நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை தொடங்கிவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பேசியது: கைப்பேசி காலத்தின் கட்டாயம். கைப்பேசி வைத்திருப்பவா்கள் மிகுந்த கவனத்துடன் அதனை கையாள வேண்டும். இதில் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது. தேவையற்ற பதிவுகளை நம்பக் கூடாது, பதிவிறக்கம் செய்யக்கூடாது. மாணவா்கள் வருங்கால சந்ததியினா். அவா்களுக்கு கைப்பேசியால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு அவசியம். கைப்பேசிகளை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா். தொடா்ந்து மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா். மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வின் ஆன்டோ ஆரோக்கியசாமி, உதவி ஆய்வாளா்கள் நீடாமங்கலம் சந்தோஷ்குமாா் , கணபதி (சைபா் குற்றங்கள்) மற்றும் காவல்துறையினா்,பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பேரணியில் கலந்துகொணடனா்.