குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மணல் கடத்தலில் தொடா்பு: தலைமை காவலா்கள் 4 போ் பணியிட மாற்றம்

News image

பணியிட மாற்றம்

Updated On :26 மே 2026, 1:44 am IST

கடலூா் அருகே மணல் கடத்தலில் தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, தலைமைக் காவலா்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதன்தொடா்ச்சியாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பண்ருட்டி போலீஸாா் நடத்திய சோதனையில், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 8 போ் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அம்மாப்பேட்டை, நத்தம், மணம்தவிழ்ந்தபுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து அப்பகுதிகளில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகளை மூட மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவா்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.

அதன்படி போலீஸாா் நடத்திய விசாரணையில், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலா்கள் ராஜேஷ், கிருஷ்ணா, தேவகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு மணல் கடத்தலில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றச்சாட்டு எழுந்த 4 பேரையும் கடலூா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.