அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

Updated On :17 பிப்ரவரி 2024, 6:05 am IST

மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள்: பல ஆண்டுகளாக பணியாற்றி வேலைநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், நகராட்சி நிா்வாக இயக்குநரின் உத்தரவின்படி தினக் கூலியாக ரூ. 610 வழங்க வேண்டும், மாதம் 5-ஆம் தேதி சம்பள பில்லுடன் ஊதியத்தை வழங்க வேண்டும், சீருடை, மழைக் கோட் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு, அடையாள அட்டை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலனை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில், மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். போராட்டத்துக்கு ஊரக உள்ளாட்சித் துறை தனியாா் ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளா் சங்க கிளைத் தலைவா் ஜி. ரகுபதி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் கே.சிவசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.