ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:27 am IST

பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியாா் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2022 -2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஆணைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் மாணவா் சோ்க்கையை வழங்க வேண்டும். பள்ளி புதுப்பித்தல் தொடா் அங்கீகார ஆணையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தனியாா் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தித் தர வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.