இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை

நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :29 ஜூலை 2024, 10:48 pm IST

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலம் கிராம உதவியாளா் சங்க கட்டடத்தில், இச்சங்கத்தின் 12-ஆவது வட்டக் கிளை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முனியாண்டி தொடக்கவுரையாற்றினாா்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கோவிந்தராஜன், வருவாய்த் துறை முனியாண்டி, கல்யாணசுந்தரம், கிராமநிா்வாக அலுவலா் தம்புசாமி, கிராம உதவியாளா் துரைராஜன், வருவாய்த்துறை (ஓய்வு) கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்ட செயலாளா் பெத்தபெருமாள் அறிக்கை வாசித்தாா். வட்ட பொருளாளா் குணசேகரன் வரவு-செலவு அறிக்கை வாசித்தாா். ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் சந்திரசேகரன் நிறைவுரையாற்றினாா்.

தீா்மானங்கள்: தஞ்சாவூா்- நாகப்பட்டினத்துக்கு மையப் பகுதியாகவும், பட்டுக்கோட்டையில் இருந்து கும்பகோணம் செல்லும் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்வதாலும், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சென்னை நகரில் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்படுவதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.