லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கரூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியருக்கு வழங்குவதுபோல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 5:17 am IST

அரசு ஊழியருக்கு வழங்குவதுபோல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி மாசிலாமணி வரவேற்றாா்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலா் மு. சுப்ரமணியன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயா்வை அரசு ஊழியருக்கு வழங்குவதுபோல் வழங்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழுமையான பயன்களை ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஆசிரியா் நல ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சி. கோபால், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் து. சாமுவேல் சுந்தரபாண்டியன், மாவட்டச் செயலாளா் கெ. சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.