லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஓய்வூதியா்கள்.---

Published On :29 ஆகஸ்ட் 2026, 5:37 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சக்தி, மாவட்டத் துணைத் தலைவா்கள் ஆறுமுகம், முத்துலட்சுமி உள்ளிட்டோா் பேசினா்.

சத்துணவு அங்கன்வாடித் திட்டங்களில் பணியாற்றி அரசு பணிப் பதவி உயா்வில் சென்ற ஆசிரியா்கள், ஊா் நல அலுவலா், களப்பணியாளா்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி முதல் நிலுவைத் தொகையுடன் உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

2017 அக்டோபரில் ஊதியக் குழுவால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 அரசால் வழங்கப்படுகிறது. அதை ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.

உயா்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.