மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
மன்னாா்குடி சஞ்சிவீ தெருவைச் சோ்ந்தவா் ச. நடராஜன் (52). மன்னாா்குடி மாடா்ன் நகரில் இவருக்குச் சொந்தமான காலி மனையில் வீடு கட்டி வருகிறாா். கழிவுநீா் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில், குடிதாங்கிச்சேரியை சோ்ந்த மு. ராமூா்த்தி (48) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, உலோகத்தாலான சிலை மண்ணில் புதைந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வட்டாட்சியா் கே. மகேஸ்குமாா், காவல் சாா்பு ஆய்வாளா் வேலாயுதம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பாா்வையிட்டனா். திருவாட்சியுடன் கூடி அந்த பழைமையான பெருமாள் சிலை ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் இருந்தது.
பின்னா், அந்த சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் துறையினா் ஆய்வுக்குப் பிறகே இந்த சிலை குறித்து மேலும் விவரம் தெரியவரும்.
தொடர்புடையது

திருவிடைமருதூா் அருகே வயலில் புதைந்திருந்த 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


