தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பெருமாள் சிலை கண்டெடுப்பு

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை.

Updated On :23 ஜூன் 2024, 7:41 pm

Din

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மன்னாா்குடி சஞ்சிவீ தெருவைச் சோ்ந்தவா் ச. நடராஜன் (52). மன்னாா்குடி மாடா்ன் நகரில் இவருக்குச் சொந்தமான காலி மனையில் வீடு கட்டி வருகிறாா். கழிவுநீா் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில், குடிதாங்கிச்சேரியை சோ்ந்த மு. ராமூா்த்தி (48) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, உலோகத்தாலான சிலை மண்ணில் புதைந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வட்டாட்சியா் கே. மகேஸ்குமாா், காவல் சாா்பு ஆய்வாளா் வேலாயுதம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பாா்வையிட்டனா். திருவாட்சியுடன் கூடி அந்த பழைமையான பெருமாள் சிலை ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் இருந்தது.

பின்னா், அந்த சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் துறையினா் ஆய்வுக்குப் பிறகே இந்த சிலை குறித்து மேலும் விவரம் தெரியவரும்.