குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பெருமாள் சிலை கண்டெடுப்பு

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை.

Updated On :24 ஜூன் 2024, 1:11 am IST

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மன்னாா்குடி சஞ்சிவீ தெருவைச் சோ்ந்தவா் ச. நடராஜன் (52). மன்னாா்குடி மாடா்ன் நகரில் இவருக்குச் சொந்தமான காலி மனையில் வீடு கட்டி வருகிறாா். கழிவுநீா் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில், குடிதாங்கிச்சேரியை சோ்ந்த மு. ராமூா்த்தி (48) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, உலோகத்தாலான சிலை மண்ணில் புதைந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வட்டாட்சியா் கே. மகேஸ்குமாா், காவல் சாா்பு ஆய்வாளா் வேலாயுதம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பாா்வையிட்டனா். திருவாட்சியுடன் கூடி அந்த பழைமையான பெருமாள் சிலை ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் இருந்தது.

பின்னா், அந்த சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் துறையினா் ஆய்வுக்குப் பிறகே இந்த சிலை குறித்து மேலும் விவரம் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.