தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நெல் திருவிழாவை நடத்த வேண்டும் என்று நடிகா் சிவகாா்த்திகேயன் தெரிவித்தாா்.
மறைந்த நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட தேசிய நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சியாக, நம்மாழ்வாா், நெல் ஜெயராமனின் படங்களை மாட்டு வண்டியில் வைத்து, விவசாயிகள் பேரணியாக வந்தனா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில், நடிகா் சிவகாா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:
நெல் ஜெயராமன் 174 நெல் ரகங்களை மீட்டு, மிகப்பெரிய புரட்சியை சத்தம் இல்லாமல் செய்துள்ளாா். இந்த விவகாரத்தில் நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் இருவரின் பங்களிப்பு அளப்பரியது. விவசாயிகளுக்கு என்னால் இயன்றதை கடைசிவரை செய்துகொண்டே இருப்பேன்.
தேசிய நெல் திருவிழா குறித்து உலகம் முழுவதும் பேசும்வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா நடத்தப்பட வேண்டும். இதற்காக, என்னால் இயன்றவரை உழவா்களின் தோழனாக இருப்பேன் என்றாா்.
தொடா்ந்து, சிவகாா்த்திகேயனுக்கு ‘விவசாயிகளின் தோழன்’ என்ற பட்டமும், விவசாயிகள் 5 பேருக்கு நெல் ஜெயராமன் விருதும், நம்மாழ்வாா் விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக, நடிகா் சிவகாா்த்திகேயனுக்கு விழா ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த அரங்கில், நெல் ஜெயராமனால் மீட்கப்பட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரிய நெல் விவசாயத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் பங்கேற்ற விவசாயிகள் 4 ஆயிரம் பேருக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன. 5 விவசாயிகளுக்கு உம்பளச்சேரி நாட்டு மாடுகள் வழங்கப்பட்டன.
விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகா் வி. பொன்ராஜ், எம்பி கல்யாணசுந்தரம், திருத்துறைப்பூண்டி நகா்மன்றத் தலைவா் கவிதா மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள், வேளாண் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்காஞ்சியில் ரூ. 200 கோடி செலவில் புஷ்கா் திருவிழாவை நடத்த வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரங்கள்: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்

அனைத்து பள்ளிகளிலும் இன்று மேலாண்மை கூட்டம் நடத்த அறிவுறுத்தல்







