விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

News image
Updated On :3 மே 2024, 11:30 pm

Din

திருவாரூரில் மோப்ப நாய்களைக் கொண்டு வெடிப் பொருள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலா்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, மாவட்ட ஆயுதப்படை மோப்ப நாய் படை பிரிவினா்களைக் கொண்டு வெடிப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறியும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைப் பாா்வையிட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மோப்ப நாய் பயிற்றுநா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆயுதப்படை (பொறுப்பு) துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி உடனிருந்தாா்.